Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் ஓனர் கைது!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (20:45 IST)
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதியின் கார் பயங்கரமாக மோதியதால் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பேருந்தில் இருந்த 40 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்ட நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் குறித்த விபரத்தை தற்போது போலீசார் கண்டுபிடித்துள்லனர். இந்த கார் அனந்த்நாக் மாவட்டம் பிஜிபெஹரா பகுதியை சேர்ந்த சஜிஜத்பாத் என்பவருடைய மாருதி கார் என்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இதனையடுத்து அந்த மாருதி காரின் உரிமையாளரை கைது செய்யப்பட்டுள்ளார். அவரை புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். காரின் உரிமையாளரிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments