Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு - நாராயணசாமி உறுதி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (12:02 IST)
புதுச்சேரியில் உள்ள சட்ட மன்ற கட்டிடத்தில்  நேற்று எம்.எல்.ஏக்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி  தலைமை தாங்கினார்.

 
அப்போது கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏக்கள் அனைவரும் தமிழகத்தைப் போன்று புதுசேரி எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். அத்துடன் எம்.எல்.ஏக்களுக்கு என்று தனி வாகன ஓட்டுனர் மற்றும், உதவியாளர் நியமிக்க வேண்டும். சென்ற முறை போன்று மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை வலுவாக முன் வைத்தனர்.
 
எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளைக் செவிசாய்த்துக்  கேட்ட நாராயணசாமி இது தொடர்பாக குளிர்காலக் கூட்டத்தொடரில் முடிவு எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏக்களுக்கு உறுதியளித்தார். தற்போது பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்கள் பல்வேறு படிகளுடன் சேர்த்து ரூ.48 ஆயிரம் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments