Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு - நாராயணசாமி உறுதி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (12:02 IST)
புதுச்சேரியில் உள்ள சட்ட மன்ற கட்டிடத்தில்  நேற்று எம்.எல்.ஏக்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி  தலைமை தாங்கினார்.

 
அப்போது கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏக்கள் அனைவரும் தமிழகத்தைப் போன்று புதுசேரி எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். அத்துடன் எம்.எல்.ஏக்களுக்கு என்று தனி வாகன ஓட்டுனர் மற்றும், உதவியாளர் நியமிக்க வேண்டும். சென்ற முறை போன்று மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை வலுவாக முன் வைத்தனர்.
 
எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளைக் செவிசாய்த்துக்  கேட்ட நாராயணசாமி இது தொடர்பாக குளிர்காலக் கூட்டத்தொடரில் முடிவு எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏக்களுக்கு உறுதியளித்தார். தற்போது பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்கள் பல்வேறு படிகளுடன் சேர்த்து ரூ.48 ஆயிரம் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments