Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பாளர் அறிவிப்பால் பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர்

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (21:14 IST)
திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் புதுச்சேரியில் தற்போது சபாநாயகராக உள்ள வைத்திலிங்கம், புதுவை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியை ராஜினாமா செய்துள்ள வைத்திலிங்கம் இதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் கொடுத்தார். துணை சபாநாயகரும் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
புதுச்சேரி தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து அதிமுக கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. இந்த தொகுதியில் ரங்கசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே முன்னாள் முதல்வர்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments