Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிஎஸ்எல்வி சி-39 தோல்வி!!

பிஎஸ்எல்வி சி-39 தோல்வி!!
, வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (19:37 IST)
இஸ்ரோ சார்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் ஏவபட்ட சிறிது நேரத்திலேயே திரும்பியதால் இந்த சோதனை தோல்வியில் முடிந்துள்ளது.


 
 
இஸ்ரோ சார்பில் இந்தியாவில் தயாரிப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 
 
இந்த செயற்கைக்கோள் இயற்கை சீற்றம், பெரிடர் மேலாண்மை, கடல்சார் ஆகிய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 320டன் எடையும், 44.4மீ உயரமும் கொண்டது இந்த செயற்கைக்கோள். 
 
பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்த திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், அதை சரிவர செய்யமுடிவில்லை என்பதால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
 
ராக்கெட் தோல்விக்கான காரணம் விரைவில் ஆராய்ந்து கூறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்ணில் பாய்ந்த இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள்