Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாவின் புதிய முதலமைச்சர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (22:26 IST)
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானதை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வ்து குறித்து இன்று காலை முதல் ஆலோசித்து வந்த பாஜக தலைமை, சற்றுமுன் புதிய முதலமைச்சரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
 
இதன்படி சபாநாயகர் பிரோமத் சாவந்த் கோவவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம் பா.ஜ.வின் கூட்டணி கட்சிகளான எம்.ஜி.பி. மற்றும் ஜி.எப்.பி. ஆகிய கட்சியை சேர்ந்த  2 பேர் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவாவில் தங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனு கவர்னரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில் பாஜக தலைமை புதிய முதல்வரை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கூட்டணியின் தயவில்தான் பாஜக ஆட்சி நடக்கின்றது என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி தரவேண்டிய கட்டாயத்தில் பாஜக நிலைமை கோவாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments