Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

Siva
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (10:29 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி தேர்வில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இரண்டு கேள்விகளை தயாரித்த பேராசிரியருக்கு, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் நடந்த கல்லூரி தேர்வில், "ஆர்எஸ்எஸ் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது?" என்ற கேள்விக்கு பதிலாக, "மத ரீதியில்" மற்றும் "ஜாதி ரீதியில்" என இரண்டு விருப்புகள் கொடுக்கப்பட்டு, அவற்றில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் கேள்வி அமைக்கப்பட்டிருந்தது.
 
அதேபோல், ஆர்எஸ்எஸ் அமைப்பை நக்சலைட்டுகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை அமைப்புகளுடன் இணைத்தும் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
 
இந்த இரண்டு கேள்விகளும் கடும் கண்டனங்களை ஏற்படுத்திய நிலையில், இந்த கேள்விகளை தயாரித்த பேராசிரியரான பன்வார் என்பவருக்கு, வினாத்தாள் தயாரிக்கும் பணியும் விடைத்தாள் திருத்தும் பணியும் மேற்கொள்ள, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments