Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாற்றி மாற்றி புகார்களை அடுக்கும் இந்தியா- சீனா: எல்லை மீறியதால் பரபரப்பு!!

மாற்றி மாற்றி புகார்களை அடுக்கும் இந்தியா- சீனா: எல்லை மீறியதால் பரபரப்பு!!
, செவ்வாய், 27 ஜூன் 2017 (12:47 IST)
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியது. 


 
 
இந்நிலையில், எல்லை தாண்டி ஊடுருவியதாக கூறிய இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சீக்கிம் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தான் ஊடுருவி வந்ததாக தெரிவித்துள்ளது.
 
இந்திய பக்தர்கள் சீன எல்லையில் உள்ள கைலாய மலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இந்திய பக்தர்களை தங்கள் எல்லைக்குள் அனுமதிக்க முடியாது என்று சீன ராணுவம் கூறிவிட்டது. இதனால் இந்திய– சீன எல்லையில் குழப்பம் நிலவியது.
 
இந்த பிரச்சினை தொடர்பாக இந்திய அரசுடன் பேசி வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் - எடப்பாடி ; வலுக்கும் மோதல் - நீடிக்குமா ஆட்சி?