Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (16:11 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக சிறைத்துறை உயரதிகாரிகள் மீது பெங்களூர் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா ஐபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இந்த குற்றச்சாட்டை அப்போதைய கர்நாடக அரசும் மறுத்தது. அதுமட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரி ரூபாவை இடமாற்றமும் செய்தது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்த அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அறிக்கையின் விபரம் வெளியே வராத நிலையில் தற்போது இந்த அறிக்கையின் விபரங்கள் கசிந்துள்ளது. அதன்படி பெங்களூரு சிறையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு சிறையில் விஐபி-களுக்கான சலுகை வழங்கப்பட்டது உண்மைதான் என உயர்மட்டக்குழு ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய ரூபா ஐஏஎஸ், 'என்னுடைய குற்றச்சாட்டுக்கள் உண்மை என அறிக்கை வந்திருப்பதில் மகிழ்ச்சி. சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments