Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உத்தர பிரதேச தேர்தல்… முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா பிரியங்கா காந்தி?

Advertiesment
உத்தர பிரதேச தேர்தல்… முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா பிரியங்கா காந்தி?
, சனி, 22 ஜனவரி 2022 (15:33 IST)
உத்தர பிரதேச மாநில தேர்தலுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச தேர்தலால் வட இந்தியா முழுவதும் பரபரப்பாகியுள்ளது. அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச வாக்குகள் பெரும்பங்கு வகிக்கும் என்பதால் இந்த தேர்தலை இந்தியாவே உற்று கவனிக்கிறது.

இந்நிலையில் இன்று தேர்தலில் இளைஞர்களுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அறிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பியபோது ‘என் முகம்தான் எங்கும் தெரிகிறது’ என்று கூறி சூசகமாக தான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு!