Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பினராயி விஜயன் பாஜகவுடன் ரகசிய சமரசம் செய்து கொண்டார்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..!

Siva
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (08:42 IST)
பினராயி விஜயன் மீதான எந்த குற்றச்சாட்டையும் பாஜக அரசு விசாரிக்கவில்லை என்றும் பாஜகவுடன் பினராயி விஜயன் ரகசிய சமரசம் செய்து கொண்டார் என்றும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று கேரளாவில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கால்பந்து விளையாட்டில் சமரசம் செய்து கொண்ட வீரரை வைத்துக் கொண்டு விளையாடி வெற்றி பெற முடியாது. அதுபோல்தான் சமரசம் செய்து கொண்ட ஒரு முதல்வரை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை மட்டுமே பினராயி விஜயன் விமர்சனம் செய்கிறார், பாஜகவை அவர் விமர்சனம் செய்வதில்லை, முதல்வர் பினராயி விஜயன் மீதான எந்த குற்றச்சாட்டு குறித்தும் மதிய பாஜக அரசு விசாரணை செய்யவில்லை, சோதனை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே பினராயி விஜயன் பாஜகவுடன் ரகசிய சமரசம் செய்து கொண்டார் என்று தெரிவித்தார்

இதற்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன் ’பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் காந்தி மீது நில முறைகேடு புகார் உள்ளது என்றும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனம் தான் பாஜகவுக்கு 170 கோடி ரூபாய்  தேர்தல் பத்திரம் மூலம் வழங்கியுள்ளது என்றும் இதற்கு பிரியங்கா காந்தி பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments