மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி!!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (17:37 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கூட இரு கட்சிகளிடையே ஆட்சியை பங்கிட்டு கொள்வதில் மோதல் ஏற்பட்டதால் கூட்டணி பிளவுப்பட்டது.
 
இந்நிலையில் ஆளுனர் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தும் அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் சிவசேனாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுனர். இதனால் சிவசேனா – தேசியவாத காங்கிரஸிடம் கூட்டணி அமைக்க முயற்சித்தது. 
 
நேற்று மாலை ஆளுனரை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. உத்தவ் தாக்கரே கோரிய 3 நாள் கெடுவை ஆளுனர் கொடுக்க மறுத்ததால் சிவசேனா ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
 
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸிடமும் ஆளுனர் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களை இன்று இரவு 8 மணிக்குள் ஆதரவு கடிதங்களை சமர்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுனர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்திருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகம்  அனுப்பியது. 
 
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். எனவே, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி தான் காரணமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி அரசியல் செய்யாமல் போய்விடுங்கள்: குஷ்பு

பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்: ஈபிஎஸ்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments