Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழகம் வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு.. இம்முறை கன்னியாகுமரிக்கு விஜயம்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:39 IST)
ஜனாதிபதி திரௌபதி முர்மு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகம் வந்தார் என்பதும் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட ஒரு சில இடங்களுக்கு சென்றார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மார்ச் 18 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு மீண்டும் தமிழக வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் திருவனந்தபுரம் வரும் ஜனாதிபதி அங்கிருந்து கன்னியாகுமாரிக்கு வருகிறார் என்றும் கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு செல்லும் அவர் அதன் பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கன்னியாகுமாரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஒத்திகை பார்க்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments