Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 2030-க்குள் 6ஜி சேவை !!!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:35 IST)
6ஜி சேவைக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை தொடங்கும் என அறிவிப்பு.


நாட்டில் 5ஜி சேவை தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 6ஜி சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 -ன் கிராண்ட் பைனலில் உரையாற்றியபோது பிரதமர் இதனை அறிவித்தார்.

விவசாயம் மற்றும் சுகாதாரத் துறையில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இளைஞர்கள் புதிய தீர்வுகளை உருவாக்க முடியும். இந்த பத்தாண்டுகளின் இறுதிக்குள் 6ஜியை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறோம். கேமிங் மற்றும் கேளிக்கைகளில் இந்திய தீர்வுகளை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. அரசாங்கத்தின் வழி முதலீடு செய்வதை, இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும் மலிவு மற்றும் அணுகக்கூடிய வகையில் அரசாங்கம் கூறும் 5G தொழில்நுட்பத்தின் வெளியீட்டை இந்தியா காண உள்ளது. ஆக்டோபர் இரண்டாவது வாரத்தில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6ஜி சேவைக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் 2030 ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments