Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! – எந்தெந்த சுங்கச்சாவடிகளில்?

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:30 IST)
தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 28 சுங்க சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. கார், வேன் போன்ற வாகனங்களுக்கு 5 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரை சுங்கக்கட்டணம் உயர வாய்ப்புள்ளது.

அதன்படி, சமயபுரம் சுங்கசாவடி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், தஞ்சை வாழவந்தான் கோட்டை, குமாரபாளையம் விஜய மங்கலம், விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி, வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம் உள்ளிட்ட 28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments