Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்த் கிஷோர் சொன்ன ஒரே அட்வைஸ்: 3வது முறை கெஜ்ரிவால் சிஎம்!!

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (18:33 IST)
ஆம் ஆத்மி டெல்லி தேர்தலில் வெற்றி பெற அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 
 
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
 
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான ஒப்பந்தத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட்ட போது ஒரே ஒரு அறிவுரை மட்டும் கெஜ்ரிவாலுக்கு வழங்கி உள்ளார். 
 
அதாவது எதிர்க்கட்சிகளுடன் மோதல் மனப்பான்மையை கைவிட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார். மேலும், பிரதமர் மோடியை குறிவைத்து தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். இவரின் இந்த அறிவுரையே ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றியை தேடித்தந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments