Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்.டி.டி.வி. இயக்குனர்கள் பதவியில் இருந்து பிரணாய் ராய் திடீர் விலகல்: அதானி அழுத்தம் காரணமா?

Pranay
, புதன், 30 நவம்பர் 2022 (11:28 IST)
என்.டி.டி.வி. இயக்குனர் பதவியிலிருந்து பிரணாய் ராய் மற்றும் அவருடைய மனைவி திடீரென விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபல தொழிலதிபர் அதானி சமீபத்தில் என்.டி.டி.வி. யின் 29.18 சதவீத பங்குகளை வாங்கினார் என்பதும் அதன் பிறகு நடந்த கூட்டத்தின் முடிவில் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இயக்குனர் பதவியிலிருந்து விலக ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் தற்போது என்.டி.டி.வி. யின் மேலும் 26 சதவீத பங்குகளையும் அதானி குழுமம் வாங்க முன் வந்துள்ளதை அடுத்து பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் என்று என்.டி.டி.வி. இயக்குனர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். இருப்பினும் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் மாயமான தொழிலதிபர் ‘ஜாக்மா’! – ஜப்பானில் தலைமறைவா?