Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: குவிந்த பக்தர்கள்!

Advertiesment
tirupathi
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (07:41 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பிரம்மோற்சவம் விழா தொடங்கப்பட்டதை அடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று முதல் பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட்டுள்ளதாக திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது என்றும் இந்த விழா ஒன்பது நாட்கள் நடைபெறும் என்றும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருள உள்ளார் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
முதல் நாளான இன்று பெரிய சேஷ வாகனத்தில்  மும்மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?