Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவைத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டி

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (12:09 IST)
நடிகர் பிரகாஷராஜ் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்துத்வாவாதி ஒருவர் சுட்டுக்கொன்றதில் இருந்து தீவிரமாக அரசியல் பேசி வருகிறார். அதிலும் இந்துத்வா அரசியலையும் சங்பரிவார் அமைப்புகளையும் எதிர்த்து பல்வேறு அரசியல் கூட்டங்களில் கடுமையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த மாணவர் அமைப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். இதனால் பிரகாஷ்ராஜ் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அவ்வப்போது எழுந்தன.

இதையடுத்து புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துக் கூறியுள்ள அவர் ரசிகர்களுக்கு தனது அரசியல் வருகையையும் அறிவித்திருக்கிறார். அந்த டிவிட்டில் ‘அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..  பொறுப்புகள் அதிகமாகியுள்ளன… உங்களின் துணையோடு நான் வர இருக்கும் பாரளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருக்கிறேன். தொகுதி குறித்த விவரங்கள் விரைவில்’ என அறிவித்துள்ளார்.

இதுபோல இந்து அமைப்புகள் மற்றும் சங் பரிவார் ஆகியோரை எதிர்த்துப் பேசுவதால் பாலுவுட்டில் தனது பட வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.  அதனால் பட வாய்ப்புகள் குறைந்ததால் அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments