Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி கலவரத்திற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ்தான் காரணம்! – பிரகாஷ் ஜவடேகர்!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (16:43 IST)
டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். பல வீடுகளும், கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்திற்கு காரணம் மத்திய அரசின் மெத்தனமே என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ”ஆரம்பம் முதலே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சிஏஏ குறித்து மக்களை தவறாக வழிநடத்தியன் விளைவாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. டெல்லி கலவரத்திற்கு காரணம் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளே. கலவரம் நடந்த பகுதிகளில் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஆயுதங்களுடன் இருந்த வீடியோ வெளியாகியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வன்முறையிலிருந்து டெல்லியை மீட்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும், தற்போது டெல்லியில் அமைதி திரும்பியிருக்கும் சூழலில் அது தொடர அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments