Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்தது பிரக்யான் ரோவர்.. ஒவ்வொரு அங்குலமாக நகர்வதாக தகவல்..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:39 IST)
இந்திய விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 நேற்று சந்திரனை அடைந்தது என்பதும் விக்ரம் லேண்டர் தரை இறங்கியதை கோடிக்கணக்கான இந்தியர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை அடுத்து தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் முழுமையாக பிரிந்து உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
நிலவின் மேற்பரப்பில் வெற்றி கரமாக பிரக்யான் ரோவர் கால் பதித்ததாகவும் லேண்டர் தரை இறங்கி ஆறு மணி நேரத்திற்கு பின்னர் பிரக்யான் ரோவர் நிலவில் தரையை தொட்டதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 
 
பிரக்யான் ரோவர் மெல்ல மெல்ல ஒவ்வொரு அங்குலமாக ஊர்ந்து நிலவில் தனது முதல் அடியை எடுத்து வைத்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் ஆய்வு மேற்கொள்ளும் என்றும்  அங்கிருந்து பல புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments