Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அனுமன் சலிசா சொன்னால் கொரோனா போய்டும்!” – அடுத்த சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.பி!

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (15:38 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவை ஒழிக்க அனுமன் சலிசா மந்திரத்தை சொல்ல வேண்டும் என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் கொரோனா மற்றும் கொரோனா தடுப்பு குறித்த தவறான தகவல்களும் இணையத்தில், சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. கொரோனா குறித்த ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் இந்த கோரிக்கையை வைத்தார்.

இந்நிலையில் பாஜக பிரபலங்களே தொடர்ந்து தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கொரோனாவை ஒழிக்க பசு கோமியம், பாபிஜீ அப்பளம் போன்ற சர்ச்சைகளை தொடர்ந்து மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர். சமீபத்தில் கொரோனாவை ஒழிப்பது குறித்து பேசிய இவர் “தினமும் ஐந்து முறை அனுமன் சலிசா மந்திரத்தை சொல்லி வந்தால் உலகத்திலிருந்தே கொரோனா போய்விடும்” என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments