Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அனுமன் சலிசா சொன்னால் கொரோனா போய்டும்!” – அடுத்த சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.பி!

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (15:38 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவை ஒழிக்க அனுமன் சலிசா மந்திரத்தை சொல்ல வேண்டும் என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் கொரோனா மற்றும் கொரோனா தடுப்பு குறித்த தவறான தகவல்களும் இணையத்தில், சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. கொரோனா குறித்த ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் இந்த கோரிக்கையை வைத்தார்.

இந்நிலையில் பாஜக பிரபலங்களே தொடர்ந்து தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கொரோனாவை ஒழிக்க பசு கோமியம், பாபிஜீ அப்பளம் போன்ற சர்ச்சைகளை தொடர்ந்து மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர். சமீபத்தில் கொரோனாவை ஒழிப்பது குறித்து பேசிய இவர் “தினமும் ஐந்து முறை அனுமன் சலிசா மந்திரத்தை சொல்லி வந்தால் உலகத்திலிருந்தே கொரோனா போய்விடும்” என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமகவை இரண்டாக உடைத்தது பாஜக தான்.. இன்னும் சில கட்சிகள் உடையும்: பத்திரிகையாளர் மணி

ப்ரமோஸ் ஏவுகணையை வெச்சு பொளந்துட்டாங்க! அடிவாங்கியதை ஒருவழியாக ஒத்துக் கொண்ட பாக். பிரதமர்!

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை எப்படியாவது மீட்டுவிடுங்கள்: ராணுவ தலைவருக்கு ஆன்மீக ஆசான் கோரிக்கை..!

இன்று 11 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

சென்னை மக்கள் நல்லா படிச்சவங்க.. குஜராத்ல படிப்பறிவு கம்மிதான்..! - சென்னையை புகழ்ந்து வன்மம் தீர்த்த ஜடேஜா?!

அடுத்த கட்டுரையில்
Show comments