Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால்துறை தேர்வு ரத்து: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (14:58 IST)
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தபால் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
இந்தி ஆங்கிலத்தில் மட்டும் தபால்துறை தேர்வு கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நிலையில் மாநில மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டது
 
இதுகுறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்பிக்கள் மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சற்றுமுன் மாநிலங்களவையில் அறிவித்தார். 
 
தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments