Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்துவிட்டதாக வெளியிட்ட பொய் செய்தி.. பூனம் பாண்டேவுக்கு 5 ஆண்டுகள் சிறை?

Siva
ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (07:47 IST)
நடிகை பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாக பொய் செய்தியை சமூக வலைத்தளத்தில் பரப்பிய நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை பூனம் பாண்டே நேற்று முன்தினம் தனது மேலாளர் மூலம் தான் கர்ப்பப்பை வாய்புற்று நோய் காரணமாக இறந்து விட்டதாக அறிவித்திருந்தார்/ அதன் பிறகு மறுநாள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன் என்று அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்

இந்த நிலையில் கடந்த 2000 ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 படி சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பினால் 3 ஆண்டுகள் முதல் 5  ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதேபோல் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

 எனவே பூனம் பாண்டே மீது இந்த பிரிவுகளில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு   சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது,.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments