Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா விளக்கத்தை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (16:33 IST)
பாஜகவின் செய்தி தொடர்பாளர் எச்.ராஜா நேற்று காலை தனது முகநூலில் பெரியார் சிலையை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்தார். பின்னர் இந்த கருத்துக்கு பயங்கர எதிர்ப்பு உண்டாகியதை தொடர்ந்து இந்த கருத்தை தான் பதிவு செய்யவில்லை என்றும் தனது அட்மின் தனக்கு தெரியாமல் பதிவு செய்துவிட்டதாகவும், இது சர்ச்சைக்குரிய பதிவு என்று தெரிந்ததும், தான் அந்த பதிவை நீக்கிவிட்டு அட்மினையும் நீக்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும் இந்த கருத்தால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்

இந்த நிலையில் எச்.ராஜாவின் வருத்தத்தையும் விளக்கத்தையும் ஏற்க முடியாது என்று கமல் உள்பட பலர் கூறினார்கள். எச்.ராஜா மன்னிப்பு கேட்கவில்லை என்றும் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எச்.ராசாவின் விளக்கத்தை ஏற்க முடியாது என்று அவரது கட்சியின் எம்பியும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது ராசா தரப்பினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சொந்த கட்சியே தனக்கு ஆதரவாக இல்லாத நிலையில் கட்சி மேலிடம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்.. பதட்டமின்றி போலீசில் சரண்..!

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., படுகொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை போல் ஆண்களுக்கு மாதம் 2 புல் பாட்டில்: எம்.ல்.ஏ கோரிக்கை..!

ரயில்வே தேர்வு ரத்து.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments