Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டால் காங்கிரஸுக்கு காய்ச்சல்: கண்டமேனிக்கு கலாய்க்கும் பொன்னார்!!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (08:38 IST)
மத்திய அரசின்  பட்ஜெட்டை பார்த்து பாவம் காங்கிரஸுக்கு காய்ச்சலே வந்துவிட்டது என மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சிறுகுறு விவசாயிகள், சிறுகுறு வியாபாரிகளுக்கு ஆதரவாக அம்சங்கள் இருந்தது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக உள்ள விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பட்ஜெட் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு காய்ச்சல் வருவது போல்,  காங்கிரஸ்காரர்களுக்கு மத்திய அரசின் பட்ஜெட்டை பார்த்து காய்ச்சல் வந்துவிட்டது என கிண்டல் செய்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெறும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments