Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவியின் மரணத்தையும் விட்டுவைக்காத அரசியல் தலைவர்கள்

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (14:16 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் இந்திய திரையுலகையே அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவரது மரணத்தை கூட அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்தி கொள்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் தளத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு UPA  அரசின்போது தான் ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பத்மவிருதுகள் அரசியலை தாண்டி இந்தியாவின் உயர்ந்த விருதுகளாக கருதப்படும் நிலையில் தங்களுடைய ஆட்சியில் கொடுக்கப்பட்ட விருது என்று காங்கிரஸ் விளம்பரப்படுத்தியுள்ளது. பின்னர் நெட்டிசன்களின் கண்டனம் காரணமாக அந்த டுவீட் டெலிட் செய்யப்பட்டது.

அதேபோல் ஸ்ரீதேவி இந்தி சினிமாவில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 'இந்தி திரையுலகிற்கு ஸ்ரீதேவி மறக்க முடியாத பல நினைவுகளை விட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். இந்த டுவீட்டுக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments