Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கன்னியாஸ்திரிகள் கைதுக்கு கிறிஸ்துவர்களின் ரியாக்சன்.. இந்துக்களிடம் இந்த ஒற்றுமை ஏன் இல்லை? இந்து தலைவர் கருத்து!

Siva
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (08:02 IST)
கேரளாவின் முக்கிய இந்து சமூக தலைவரான வெள்ளாப்பள்ளி நடேசன், கிறித்துவ சமூகம் இந்திய மக்கள் தொகையில் 2% மட்டுமே இருந்தாலும், ஒன்றுபட்டு செயல்பட்டால் அரசியல் கட்சிகளை ஈர்க்கும் சக்திவாய்ந்த வாக்கு வங்கியாக மாறும் என்பதை நிரூபித்துள்ளதாக கூறியுள்ளார்.
 
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய நடேசன்,   "கிறித்துவத்தில் பல பிரிவுகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்றதால்தான்  அரசை கலங்கடிக்க முடிந்தது. அவர்களுக்கு ஆதரவாக பேச இத்தனை பேர் இருந்தனர்.
 
சம்பவம் சரியானதோ, தவறானதோ, 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டபோது, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க. உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவாக சத்தீஸ்கருக்கு விரைந்து சென்றனர்.
 
ஆனால் நமது குரு சொன்னதை நாம் கேட்கிறோமா? நாம் ஒழுங்கமைத்து ஒன்றாக நின்றால் எங்கே சென்றிருப்போம்?" என்று கேள்வி எழுப்பினார்.
 
கிறித்துவ சமூகத்தின் ஒற்றுமை, ஒரு சிறிய குழு கூட ஒன்றுபட்டு செயல்பட்டால் பெரிய அரசியல் சக்தியாக மாற முடியும் என்பதை காட்டுவதாகவும், "அந்த கைது சரியா தவறா என்பதை நான் சொல்லவில்லை; ஆனால் அவர்களின் ஒற்றுமை, எதை செய்ய முடியும் என்பதை காட்டியது" என்றும் நடேசன் விளக்கமளித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments