Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒடும் ரயிலில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட போலீஸ்

ஒடும் ரயிலில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட போலீஸ்

ஒடும் ரயிலில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட போலீஸ்
, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (17:39 IST)
மும்பையில் ஒடும் ரயிலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

 
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவல்துறை அதிகாரி அமர் கெயிட்வாட் என்பவர் போரிவலியில் இருந்து சர்ச்கேட் பகுதிக்கு செல்லும் புறநகர் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.
 
அந்த ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணித்த அவர் சுமார் 5.30 மணியளவில் ஓடும் ரயிலிலே அவரது கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்த பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவரது உயிர் பிரிந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹூண்டாய் கார்களின் விலை உயர்கிறது