ஹூண்டாய் கார்களின் விலை உயர்கிறது
ஹூண்டாய் கார்களின் விலை உயர்கிறது
கார் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஹூண்டாய் நிறுவனம், ஆகஸ்ட் 16 முதல் கார்களின் விலையை, உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.
உலக சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பது மற்றும் முதலீடு செலவுகள் அதிகமாவதை கணக்கில் கொண்டு கார்களின் விலைகளை உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஆகஸ்ட மாதம் 16ஆம் தேதி முதல் ரூ:3,000 முதல் ரூ:20,000 வரை உயர்த்தப்படும் என்று ஹூண்டாய் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
மாருதி சுசூகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்த நிலையில் தற்போது ஹூண்டாய் நிறுவனமும் அதன் கார்களின் விலையை உயர்த்துவதாக அரிவித்துள்ளது.