Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தற்கொலை: பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (11:35 IST)
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மூத்த சகோதரர் தூக்கிட்டு தற்கொலை.


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த மூத்த சகோதரர் பி.கே. தேவராஜ். சென்னை வசித்து வரும் இவருக்கு 63 வயதாகிறது. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தொழில் செய்து வரும் நிலையில் குடும்பத்துடன் சென்னை ஓட்டேரியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர் நேற்றிரவு 11 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற ஓட்டேரி காவல் துறையினர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில வாரங்களாக இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும் தற்கொலைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments