Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் மூலமாக போதைப்பொருள் விற்பனை! – நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்கு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (09:41 IST)
அமேசான் தளம் மூலமாக போதைப்பொருள் விற்கப்பட்ட விவகாரத்தில் அமேசான் இந்தியா நிர்வாக இயக்குனர்கள் மீது மத்திய பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் ஆன்லைன் வழியாக பொருட்கள் விற்கும் தளங்களில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக அமேசான் உள்ளது. இந்த தளத்தில் பல்வேறு பொருட்களும் விற்பனையாளர்கள் மூலமாக விற்கப்படும் நிலையில் போதைப்பொருள் இந்த தளம் மூலமாக விற்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த சூரஜ் கல்லு பாவய்யா என்பவர் ஏஎஸ்எஸ்எல் என்ற பெயரில் அமேசானில் தனது நிறுவனத்தை பதிவு செய்து அதன் மூலம் போதைப்பொருட்களை நாடு முழுவதும் பல இடங்களுக்கு விற்பனை செய்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அமேசான் இந்தியா நிர்வாக இயக்குனர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது, விரைவில் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments