Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு விஷம் கொடுத்து சோதித்த ஜாலி?! – தொடர் கொலைகளின் பிண்ணனி

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (18:40 IST)
கேரளாவில் தனது உறவினர்களை தொடர்ச்சியாக கொலை செய்த ஜாலி குறித்து மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாலி தாமஸ். இவர் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களை சூப்பில் விஷம் கலந்து கொலை செய்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது.

கேரள போலீஸால் கைது செய்யப்பட்ட ஜாலியிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் முதன்முதலில் ஜாலி சூப்பில் சயனைடு கலந்து தனது நாய்க்கு கொடுத்து சோதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாய்க்கு வெறிபிடித்ததால் கொல்வதற்காக அப்படி செய்ததாக ஜாலி கூறியிருந்தாலும் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாம்.

ஜாலியின் தொடர் கொலை சம்பவங்களுக்கு ஆரம்பமாக நாய்க்கு விஷம் வைத்த சம்பவம் இருக்கலாம் என போலீஸ் கருதுவதால் நாய் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து பிரேத பரிசோதனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments