Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தி உருவ பொம்மையை சுட்ட பூஜா பாண்டே கணவருடன் கைது

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (09:32 IST)
கடந்த ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவே மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை அனுசரித்து கொண்டிருந்தபோது, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் அருகே உள்ள நவ்ரங்காபாத்தில் இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே என்பவர், காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மகாத்மா காந்தி உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அவருடன் அவருடைய கணவ்ர் அசோக் பாண்டேவையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் 11 பேர்களும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments