Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் பிரச்சனையை போக்க 3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் - பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (20:37 IST)
நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம் என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
நீர் மேலாண்மையில் தற்போதுள்ள முறைகளை மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி வீட்டு உபயோக நீரை மறுசுழற்சி செய்து பாசனத்துக்கு பயன்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்கவுள்ளோம். 
 
மேலும், அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது.  நம் நாட்டில் உள்ள தாய்மார்கள் சசோதர சகோதரிகள் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்காத நிலையை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.
 
நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம் என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பிரச்சனையில் சிக்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments