Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம்; மூச்சு பயிற்சி செய்யுங்கள் – மன் கீ பாத்தில் மோடி அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (12:11 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ள பிரதமர் மோடி கொரோனா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.

அதில் பேசிய பிரதமர் மோடி ”இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நாம் அதை ஒன்றாக இணைந்து எதிர்த்து போராட வேண்டும். இந்தியாவில் மருத்துவ வசதிகள், வெண்டிலேட்டர் உள்ளிட்டவை உள்ளன, கொரோனாவிற்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். அது நுரையீரலை விரிவுப்படுத்தும். கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் வெளியாக போலி தகவல்களை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments