Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் முழுக்க கொரோனா போராட்டம்; ஆனா நமக்கு..!? – பிரதமர் மோடி உரை!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (11:57 IST)
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்தியா மட்டும் கொரோனாவுடன் இணைந்து வேறு பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பொருளாதாரம் பெரும் இடர்பாடுகளை சந்தித்துள்ளது, பொருளாதார மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு துறைகளுக்குமாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கான கடனுதவிகளை அளித்துள்ளது. இந்நிலையில் இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

அதை தொடர்ந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இந்திய வர்த்தக சபைக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியா மட்டும் கொரோனா மட்டுமல்லாமல் வெட்டுக்கிளி தாக்குதல், புயல், பூகம்பம், அசாம் தீ விபத்து என பலவற்றுடன் போராடி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments