Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3வது முறையும் மோடி தான் பிரதமர் ஆவார்.. முதல்வர் நம்பிக்கை

Modi
, சனி, 31 டிசம்பர் 2022 (18:49 IST)
பிரதமர் மோடி ஏற்கனவே இரண்டு முறை பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள நிலையில் மூன்றாவது முறையும் அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேட்டியளித்துள்ளார். 
 
பிரதமர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் அதில் எந்த தவறும் கிடையாது என்றும் ஆனால் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை போகிறவர்களை பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.
 
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்: அதிரடியாக அறிவித்த அமித்ஷா