Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து..!

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (09:54 IST)
நாளை திருப்பதி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய இருக்கும் நிலையில் நாளைய தினத்தின் விஐபி டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.  அவருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து திருப்பதி முழுவதும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை காலை தரிசனம் செய்ய இருப்பதால் அனைத்து விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பிற வகை தரிசனமும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளன.

ஐந்து மாநில தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த தேர்தலில் வெற்றி பெறவும், விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவும் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. நகை வியாபாரிகள் அதிர்ச்சி..!

வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சி அடைந்துள்ளேன்: காசா விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

அமித்ஷா - எடப்பாடியார் சந்திப்பால் திமுக பதறுகிறது! - தமிழிசை சௌந்தர்ராஜன்!

எந்த பயனும் இல்ல.. 256 திட்டங்களை கைவிடும் தமிழக அரசு? - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

கைக்குட்டையால் முகத்தை துடைப்பது கூட குற்றமா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments