திடீரென தமிழில் டுவீட் போட்ட பிரதமர் மோடி! என்ன காரணம் தெரியுமா?

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (09:07 IST)
பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மேடையில் தமிழில் பேசுவதும், தமிழில் டுவீட் பதிவு செய்வதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வாக இருந்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு டுவிட்டுக்களை தமிழில் பதிவு செய்துள்ளார்
 
இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதியார் குறித்து அவர் பதிவு செய்துள்ள இந்த இரண்டு டுவிட்டுக்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு சில நிமிடங்களில் இந்த இரண்டு டுவிட்டுக்களுக்கும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ரீடுவீட்டுக்கள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பாரதியார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின்  பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.  அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன. சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 
பாரதியாரின் பிறந்த நாளை தமிழக அரசியல்வாதிகளே பலர் மறந்துவிட்ட நிலையில் பிரதமர் மோடி அவரது பெருமைகளை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது குறித்து பாஜகவினர் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments