Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவுக்கும் மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு: பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அடுத்த கட்டமாக நிலவுக்கு மனிதனை அனுப்புவதே இந்தியாவின் இலக்கு என்று கூறியுள்ளார்.  
 
சந்திராயன் 3 வெற்றி மனித குலத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் விண்வெளிக்கும் நிலவுக்கும் மனிதனை அனுப்புவது தான் அடுத்த இலக்கு என்றும் பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்காவில் இருந்து தெரிவித்துள்ளார்.  
 
அதுமட்டுமின்றி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தையும் விரைவில் அனுப்ப உள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
விண்வெளி துறையில் அமெரிக்க ரஷ்யாவை அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பும் திட்டம் நிறைவேறிவிட்டால் இந்தியா மிகப் பெரிய சாதனை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments