Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் எதை பற்றியும் விவாதிக்க தயார்! – பிரதமர் மோடி உறுதி

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (11:06 IST)
இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எது குறித்தும் விவாதிக்க தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலுக்காக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. நாளை பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் இன்று கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னதாக பேசிய பிரதமர் மோடி “இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் உலக அளவில் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இருக்கும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்த வித ஒளிவு மறைவுமின்றி அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க தயார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை..!

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்? ரயில்வே துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments