Publish Date: Sun, 30 Jul 2023 (12:31 IST)
Updated Date: Sun, 30 Jul 2023 (12:33 IST)
மக்களின் கனவு நிறைவேறுவதை கண்டு சிலருக்கு ஆத்திரம் வருகிறது என எதிர்கட்சி கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசிய போது முந்தைய ஆட்சியாளர்கள் இப்போது ஆட்சி செய்திருந்தால் பால் லிட்டருக்கு 300 ரூபாய் தானியங்கள் கிலோ 500 ரூபாய் விற்று இருக்கும்
ஒரு ஜிபி இணைய டேட்டாவுக்கு ரூபாய் 300 செலவழித்தவர்கள் இப்போது அதே விலையில் 20 ஜிபி டேட்டா வரை பெற்று வருகின்றனர். நாடு முன்னேற்ற பாதையில் செல்வது சிலருக்கு பிடிக்கவில்லை.
மக்களின் கனவுகள் நிறைவேறுவதை கண்டு அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.