Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது - காங்., தலைவர் கார்கே

Sinoj
திங்கள், 11 மார்ச் 2024 (17:49 IST)
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நட்த்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது;
 
''தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை  SBI வெளியிடுவதற்கு  4 மாதம் கால தாமதம் ஏன்? தேர்தல்பத்திரம் குறித்து வெளியிட்டால் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி அளித்தார்கள் என்ற உண்மை வெளியே வந்துவிடும் என்ற  பயத்தில் இருகிறது பிரதமர் மோடியின் அரசு'' என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், ''நாம் அனைவரும்  ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், கருத்துச் சுதந்திரச் செயல்கள் முழுவதையும் பிரதமர் மோடியின்  அரசு ஏற்க மறுக்கிறது.  அம்பேத்கர் பற்றி பேசிக் கொண்டு சமூக நீதிக் கொள்கைகள் எதையுமே நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது பிரதமர் மோடியின் அரசு. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் பட்சத்தில் 100 சதவீதம் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments