Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நாளன்று திடீரென சரிந்த பங்குச்சந்தை.. தேர்தலுக்கு பின் என்ன ஆகும்?

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (11:40 IST)
இன்று தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தேர்தல் நாள் அன்று திடீரென பங்குச்சந்தை 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 260 புள்ளிகள் சார்ந்து 72228 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 89 புள்ளிகள் சரிந்து 21,902 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
தேர்தல் நாளில் பங்குச்சந்தை சரிந்தாலும் தேர்தலுக்குப் பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் பங்குச்சந்தை அதிகரிக்கும் என்றும் எனவே தேர்தல் முடிவு வரும் வரை புதிய முதலீடுகள் அதிகம் செய்யாமல் பங்குச்சந்தையை வெறும் பார்வையாளராக இருந்து பார்க்கும்படி பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments