Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜப்பான் புறப்படும் இந்திய ஒலிம்பிக் வீரர்கள்! – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஜப்பான் புறப்படும் இந்திய ஒலிம்பிக் வீரர்கள்! – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
, வெள்ளி, 9 ஜூலை 2021 (11:04 IST)
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டே நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் இந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக இந்திய ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் ஜூலை 17ம் தேதி ஜப்பான் புறப்படுகின்றனர். அதற்கு முன்பாக ஜூலை 13ம் தேதி ஒலிம்பிக் செல்லும் வீரர்களை காணொலி மூலமாக சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி. ஒலிம்பிக் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன், கொரோனா காலத்தில் பாதுகாப்பாக சென்று வரவும் வாழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம்!