Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தாயோட ஆசீர்வாதம் இருந்தால்…! – தாயிடம் ஆசீர்வாதம் பெற்ற பிரதமர்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:29 IST)
4 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி தனது தாயிடம் ஆசிர்வாதம் பெறும் புகைப்படத்தை ஜோதிராதித்ய சிந்தியா பகிர்ந்துள்ளார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பஞ்சாப் தவிர பிற நான்கு மாநிலங்களிலும் பாஜக பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றியை தொடர்ந்து சொந்த மாநிலமான குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தனது தாயிடம் சென்று பிரதமர் மோடி ஆசி பெற்றார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஜோதிராதித்ய சிந்தியா “இதுதான் ஒரு தாயின் வேண்டுதல் மற்றும் ஆசிர்வாதத்தின் சக்தி. நீங்கள் தொடர்ந்து நாட்டின் சேவைக்காக சோர்வின்றி உழைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments