Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தினத்துக்கு வந்துட்டு போங்களேன்; அழைத்த மோடி! – ஏற்றுக்கொண்ட போரிஸ் ஜான்சன்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:54 IST)
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு உலக தலைவர்கள் யாரும் இந்தியா வராத நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு தலைவர்கள் வந்து விருந்தினராக கலந்து கொண்டு வந்தனர். கடந்த மார்ச்சில் அதிபர் ட்ரம்ப் வந்து சென்ற பிறகு கொரோனா தாக்கம் காரணமாக உலக தலைவர்கள் யாரும் இந்தியா வரவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினத்தில் விருந்தினராக கலந்து கொள்ள போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்து தூதரக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments