Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை: கட்டுப்பாடுகள் அதிகரிப்பா? ஊரடங்கா?

முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை: கட்டுப்பாடுகள் அதிகரிப்பா? ஊரடங்கா?
, வியாழன், 8 ஏப்ரல் 2021 (06:59 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் இந்தியாவின் ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மத்திய அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று 12 மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா  வைரஸ் அதிகம் பரவி வரும் மாநிலங்களின் முதல்வர்களுடன் மட்டும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார் 
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் நாடு முழுவதும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படலாம் போன்ற அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
கொரோனா நோயை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்னர் முக்கிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பகல் நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13.36 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!