Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (19:06 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்து நொறுங்கியதை அடுத்து பிரதமர் மோடி, சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

இன்று நடந்த மகாராஷ்டிராவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி என்பது வெறும் பெயரோ, அரசரோ அல்ல. அவர் நமக்கு தெய்வம், நான் அவரது காலடியில் தலைவணங்கி என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எங்களை பொறுத்தவரை எங்கள் தெய்வத்தை விட பெரியது வேறு எதுவும் இல்லை. சிலர் வீர சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் அவரை அவமதிப்பிற்காக மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இல்லை.

சிவாஜி சிலை இடிந்து விழுந்தது என்றதும் நான் சிவாஜியின் மகாராஜாவிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன். இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு பிரதமர் மோடி பேசி உள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments