Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவையில் கடும் கோபத்தில் பேசி வருகிறார் மோடி: எதிர்க்கட்சிகள் அட்ராசிட்டி!

Advertiesment
மக்களவையில் கடும் கோபத்தில் பேசி வருகிறார் மோடி: எதிர்க்கட்சிகள் அட்ராசிட்டி!
, புதன், 7 பிப்ரவரி 2018 (13:09 IST)
இன்று தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி கடும் கோபத்தில் பேசி வருகிறார்.
 
இந்த வருடத்தின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
 
இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களுக்கு ஆதரவு அமளியில் ஈடுபட்டனர்.
 
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தனது உரையை நிறுத்தாமல் கோபமாக பேசி வருகிறார். மிகவும் உரத்த குரலில் பேசி வரும் பிரதமர் மோடியின் முகத்தில் கடும் கோபம் தெரிகிறது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்தில் சிக்கிய மோடியின் மனைவி - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி